search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை   1240 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  -கலெக்டர் தகவல்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 1240 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் -கலெக்டர் தகவல்

    • 1240 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது.
    • வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாளை (18ம் தேதி) மாநிலம் தழுவிய மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்துதத் முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1240 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. இம்மாவட்டத்தில் இது வரை கொரோன தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணி யாளர்களுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படையவில்லை எனவும், அவ்வாறு நோய் தொற்று உறுதியானாலும் உயிர் சேதம் மற்றும் தீவிர நோய் தொற்றும் ஏதும் ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

    இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும், முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 18 முதல் 59 வயதிற்குபட்ட நபர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவ முகாம்களில் வருகிற 30-ம் தேதி வரை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். மேலும், வருகிற 30-ம் தேதிக்கு பின் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாது. இந்த அரியவாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×