search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் விலை சரிவு ஒட்டன்சத்திரத்தில் தக்காளியை கூவி, கூவி விற்கும் நிலை
    X

    கோப்பு படம்

    வரத்து அதிகரிப்பால் விலை சரிவு ஒட்டன்சத்திரத்தில் தக்காளியை கூவி, கூவி விற்கும் நிலை

    • தக்காளி வரத்து அதிகரிப்பு காரண மாக விலைக் கடுமையாக வீழ்ச்சியடை ந்துள்ளது.
    • ஒரு பெட்டி தக்காளி ரூ. 50 முதல் ரூ. 60 வரை விலை குறைந்துள்ளது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய மார்க்கெட் ஆகும். இங்கி ருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களு க்கும் தக்காளி, சின்ன வெங்காயம் வெண்டை, கத்தரி, சவ்சவ், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறி கள் ஆயிரக்கண க்கான டன் கணக்கில் அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்பொழுது தக்காளி வரத்து அதிகரிப்பு காரண மாக விலைக் கடுமையாக வீழ்ச்சியடை ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொ ள்முதல் செய்யப்பட்டது.

    கர்நாடகா, பொள்ளாச்சி, வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் இருந்து அதிக அளவு தக்காளி வரத்து உள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ. 50 முதல் ரூ. 60 வரை விலை குறைந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வியாபாரிகள் வராத காரணத்தினால் விவசாயி கள் கவலை அடைந்துள்ள னர். தற்போது மார்க்கெட்டு க்கு வந்து இறங்கிய தக்காளியை வியாபாரிகள் கூவி கூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதாக வியா பாரிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×