search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த  மூதாட்டியிடம் நகை -பணம் திருட  முயன்ற  கொள்ளையன் கைது
    X

    அமரன்

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை -பணம் திருட முயன்ற கொள்ளையன் கைது

    • மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
    • பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சின்னப்பே ட்டைதோப்புதெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி மின்னல்கண்ணி (வயது 60). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வாலிபர் இவரிடம் குடிக்க தண்ணீர்கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்கஉள்ள சென்றபோதுவீட்டின் உள்ளே இருந்த மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

    மூதாட்டி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் மேற்படி நபரை பிடித்துபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையி ல்விழுப்பு ரம் அருகே விக்கிரவண்டி பழையகருவாச்சி, இந்திரா நகரைசேர்ந்த அமரன் (26)என்பது தெரியவந்தது. இவன்பல இடங்களில் தனியாக இருக்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது. இதனைதொடர்ந்து இவனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×