என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
    X

    மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

    • அறுந்து கிடந்த ஒயரை எடுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த உக்கல் கிராமம் குட்டை கரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45) விவசாய கூலி தொழிலாளி. இவது மனைவி கவுரி. இவர்களுக்கு செல்வம், வெற்றிவேல் என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சங்கர் நேற்று மாலை வீட்டின் முன்பு அறுந்து கிடந்த ஒயரை எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தது கிடந்தார். சங்கரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து இவருடைய மனைவி கவுரி தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிதார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×