என் மலர்
உள்ளூர் செய்திகள்

மினி வேன் மோதி தொழிலாளி சாவு
- மனைவி போலீஸ் நிலையத்தில் புகார்
- பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள அனாதிமங்கலம், கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், (வயது 45) தொழிலாளி. சேத்துப்பட்டில் இருந்து அனாதிமங்கல கிராமம் நோக்கி ஆரணி - சேத்துப்பட்டை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி எதிரே வந்தமினி வேன் அய்யப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அய்யப்பனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துமனி வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






