search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் பால்குட ஊர்வலம்
    X

    பெண்கள் பால்குட ஊர்வலம்

    • ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய நாயகி உடனுரை ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதி வேண்டி 9ம் ஆண்டு பால்குடம் ஆரணி டவுன் பழைய காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ அரியாத்தமன் ஆலயத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து பால்குடம் ஏந்தி காந்தி ரோடு பழைய பஸ் நிலையம் பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வர் ஆலயத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

    இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆலய நிர்வாகி நடராஜன், மற்றும பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×