என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்யாறு:

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில், ஆரணி கூட்ரோட்டில் நகர தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் நகர மன்ற தலைவர் சம்பத், நகர மன்ற தலைவர் மோகனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கலைமணி பாரதி, செந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்எல்ஏ ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை 300 நபர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சி இறுதியில் மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் வழக்கறிஞர் சான் பாஷா நன்றி கூறினார்.

    முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், வழக்கறிஞர்ஆர்.வி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பார்த்திபன், நகர கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை, ரமேஷ், ராம் ரவி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×