என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்
- 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
- நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா தனபால் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர்கள் ஆர்.ஆனந்தன் ஏ.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பஞ்சமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் எம்.அனுராதா சுகுமார் விழிப்புணர்வு சிறப்பு முகாமினை தொடங்கிவைத்தார்.
இந்த முகாமில் 300 மாடுகள் 200 ஆடுகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
மேலும் நோய் அறிகுறிகள் சிகிச்சை முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர்கள் சுப்பிரமணி செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை ஆய்வாளர் விஜயா நன்றி கூறினார்.






