என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசி மகா மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    கோவில் திருவிழா நடந்த போது எடுத்த படம்.

    வந்தவாசி மகா மாரியம்மன் கோவில் திருவிழா

    • பக்தர்கள் காளி வேஷமிட்டு ஊர்வலமாக வந்தனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.

    வந்தவாசி:

    வந்தவாசி பெரிய காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி மாதம் முன்னிட்டு மகா மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் காளி வேஷம் போட்டுக் கொண்டும் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது வந்தவாசி தேரடி பகுதியில் வந்தபோது பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு ஆகாயத்தில் பறந்தபடி அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காண்பித்தனர்.

    இதைதொடர்ந்து அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு பஜார் வீதி பழைய பஸ் நிலையம் கோட்டை மூலை வழியாக மகா மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இந்த திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    Next Story
    ×