என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் கடையில் திருட்டு
    X

    செல்போன் கடையில் திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிசிடிவி காட்சி ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் மண்டி வீதியில் ஆரணி டவுன் வி.ஏ.கே நகர் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் செல்போன் உதிரி பாகம் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வருகின்றார்.

    நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து கருணாகரன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் கடையில் உள்ளே வந்தார்.

    சிறிது நேரத்தில் திரும்பி பார்த்த போது டிப்டாப் ஆசாமி காணவில்லை இதனையடுத்து தனது கடையில் மேஜை மீது வைத்திருந்த செல்போன் காணாததை கண்டு கருணாகரன் அதிர்ச்சியடைந்தார். மேலும் தன் செல்போன் கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார்.

    அப்போது டிப்டாப் ஆசாமி செல் போனை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து கருணாகரன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×