search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்குன்றம் மலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு
    X

    வெண்குன்றம் மலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணித்து வரும் காட்சி.

    வெண்குன்றம் மலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு

    • வந்தவாசியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் சமூக விரோதிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் போலீசா ர் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வெண்குன்றம் கிராமத்தில் மிகப்பெரிய மலை உள்ளது இந்த மலையில் 1440 அடி உயரத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இந்த மலை மீது வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார்த்திகை மாதம் தீபம் அன்று மலை ஏற்றுவது வழக்கம்.

    புகழ் பெற்ற இந்த மலையில் உள்ள ஸ்ரீ தவளகிரீஸ்வரர் கோவிலை கடந்த ஆகஸ்டு மாதம் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தற்போது இந்த மலையில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மலையின் அடிவாரத்தில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்த பிறகு அவர்களுடைய முழு விலாசத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் மலையின் மீது ஏற அனுமதித்து வருகின்றனர்.

    கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் தற்போது வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையின் அடிவாரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×