search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்டூர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் சாவு
    X

    வாலிபர் உடலை மீட்ட போது எடுத்த படம். 

    குட்டூர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் சாவு

    • விழுப்புரத்தை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த யாசின் என்பவரது மகன் ஹாரிப் (வயது 23).

    இவர் தனது உறவினர்களுடன் செங்கம் அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் நீரில் மூழ்கி உறவினர்களின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செங்கம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தன். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின்னர் வாலிபர் உடலை மீட்டனர் செங்கம் போலீசாரிடம் உடலை வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்ன்றனர்.

    Next Story
    ×