என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை
- வாட்ஸ்-அப்பில் ஆடியோ அனுப்பி விபரீதம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 47). இவர் அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கீதா (வயது 21) உள்பட 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
கல்லூரி மாணவி தற்கொலை
கீதா தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கீதாவை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கீதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவு
சிவலிங்கம் தனது மகள் செல்போனை பார்த்த போது அதில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் செய்யாறு தாலுகா சடத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாகவும், பிறகு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ ஆடியோ செய்தி அனுப்பி உள்ளது தெரியவந்தது. அதனால் விரக்தியில் கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் அனக் காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






