search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா, மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை
    X

    கஞ்சா, மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    செய்யாறு புதிய டிஎஸ்பி ஆக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள வெங்கடேசன் கூறியதாவது:-

    செய்யாறு போலீஸ் உட்கோட்டத்தில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிப்பது தான் முதல் கடமையாக இருக்கும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை போலீசார்கள் ஈடுபடுவார்கள். கஞ்சா விற்பவர்கள், மணல் கடத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அவர்களது சொத்துகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மணல் கடத்தல் குறித்து புகார் செய்தால் நானே களத்தில் இறங்கி பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்.

    பஸ் நிலையம், மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தேவையில்லாமல் நிற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செய்யாறு டவுன் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் இரவு நேர போலீசில் வந்து செய்வது அட்டவணை செய்து கண்காணிக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி வெங்கடேசன் கூறினார்.

    Next Story
    ×