search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீகிருஷ்ணர், அங்காளபரமேஸ்வரி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஸ்ரீகிருஷ்ணர், அங்காளபரமேஸ்வரி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

    • சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அங்காளபரமேஸ்வரி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீமுனிஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடு செய்தனர்.

    கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கோவில் வளாகங்களில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம் உட்பட ஹோமங்கள் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மகாபூர்ணாகதி, யாக பூஜைகளை சிவாச்சாரி யார்கள் செய்தனர். இதை தொடர்ந்து திருக்கோவில்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் தாழையூத்து கிராம மக்கள் உட்பட செங்கம் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×