search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஜப்திகாரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதை தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்தப் புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மங்கள மேள வாதியுங்கள் மகா தீபாதரணை காண்பிக்கப்பட்டது.

    இந்த சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்திற்கான திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ரேணுகாம்பாள் தரிசனம் செய்து சென்றனர்.

    Next Story
    ×