என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி ஊராட்சி பருவதமலை அடிவாரத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், காளியம்மன், அம்மச்சார் அம்மன், ராமர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






