search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    எறும்பூர் கிராம ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றிய காட்சி.

    ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • விவசாயம் செய்து வந்த னர்
    • போலீசார் பாதுகாப்புடன் நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரி உள்ளது.

    ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.

    வந்தவாசி வடக்கு போலீசார் பாதுகாப்புடன், கோவிலூர் பாசனப் பிரிவு இளநிலைப் பொறியாளர் எஸ்.பரந்தாமன் தலைமையிலான பொதுப்பணித் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அப்போது, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×