என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி
- சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று பெருமிதம்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் யூனியனில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியை சரவணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியானது நமது மாவட்டத்தில் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி அந்தந்த பகுதிகளில் தினமும் நடந்து வருகிறது.
இப்பேரனியின் நோக்கமே குழந்தை திருமணத்தை தடுத்தல் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் புதுமைப்பெண் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தல் பெண் கல்வியை ஊக்குவித்தல் பாலின வன்முறைக்கு எதிரான செயல்களை தடுத்தல் பெண்களுக்கு சமூகத்தில் சம வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தைகளை நேரடியாக தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தல் ஆகியவைகள் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளாகும் இவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது தான் இப்பேரணியின் நோக்கம் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்களின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மேலும் நமது மாவட்டத்தின் அமைச்சர் எவ வேலு தனியார் நிறுவனங்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பு முகாமை ஏற்படுத்தினார் இம்முகாம்களில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் தான் தேர்வானார்கள் எனவே பெண்கள் எதற்காகவும் வீட்டில் முடங்காமல் வெளியில் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசி உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் திட்ட அணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்






