என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
- 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது
- புதிய ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ குழு சார்பில் பொது மக்கள் பார்வையிட அமைக்கப்பட்டுள்ள திணை, கம்பு, ராகி, கோதுமை, பார்லி, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பயன்கள் காட்சிப்படுத்தப்பட்டதை அம்பேத்குமார் எம். எல். ஏ. பார்வையிட்டு முகாமில் சிறப்புரையாற்றினார்.
இதில் தாசில்தார் முருகானந்தம்
நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ராதா பிரபு கீழ் சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுதாகர், அமானுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
இந்த மருத்துவ முகாமில் கீழ்சாத்தமங்கலம் , இந்திராநகர், சத்யாநகர், அண்ணாநகர், ஆகிய பகுதிகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் கீழ் சாத்தமங்கலம் பகுதியில் ரேஸ் புதிய ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை பணியையும் அம்பேத்குமார் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்.






