என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 மாணவன் தீக்குளித்து தற்கொலை
- தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி.
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37) விவசாயி இவரது மனைவி மலர் (35) இவர்களுக்கு அன்பரசன் (18) என்ற மகன் உள்ளார். அன்பரசன் தெய்யார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று 285 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அன்பரசன் டிசி மற்றும் மார்க் சீட் வாங்குவதற்கு கடந்த 1-ந் தேதி அன்று பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர்.
தாயார் அன்பரசனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த 3 லிட்டர் மண் எண்ணெயை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்று உடலில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அன்பரசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்