search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா
    X

    படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா

    • சிவலிங்க ஆலிங்கண பூஜை நடைபெற்றது
    • மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 26-ம்தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் உற்சவ அம்மனை கொலு வைத்து நேற்று முன்தினம் 27-ம்தேதி காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது.

    தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசா தங்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த 27-ம்தேதி மாலை ஸ்ரீ மீனாட்சி நாட்டியக் குழு மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. நாட்டியக் குழுவினருக்கு கோவில் சார்பில் செயல் அலுவலர் சிவஞானம்,மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் சான்றிதழ்கள், பிரசாதங்கள் வழங்கினர்.

    மேலும் நான்காம் நாளான நேற்று 28-ம்தேதி அம்மனுக்கு சிவலிங்க ஆலிங்கண பூஜை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வேலூர் ஸ்ரீகிருஷ்ணா மந்திர் மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×