search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் முதியவர் சாவு
    X

    பைக் விபத்தில் முதியவர் சாவு

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊத்தூர், கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், வயது 65 விவசாயி.

    இவரது மனைவி சரோஜா, இவர்களது பேத்தி நிஷா, ஆகியோர் பத்தியாவரம் ஊத்தூர் கிராமத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் ராஜேந்திரன், சரோஜா, நிஷா, ஆகியோர் கிழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜேந்திரன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தர்.

    சரோஜா, நிஷா, ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயகுமார், வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×