search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம்.களில் இரவு காவலர்கள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்
    X

    ஏ.டி.எம்.களில் இரவு காவலர்கள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்

    • டி.எஸ்.பி. அதிரடி உத்தரவு
    • செய்யாறில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

    செய்யாறு:

    செய்யாறு காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வங்கி கிளை மேலாளர்க ளுக்கும் மற்றும் ஏ.டி.எம். காவலாளி களுக்குமான விழிப்புணர்வு கூட்டம் செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் நேற்று மாலை நடந்தது.

    இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செய்யாறு வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள வங்கி கிளை மேலாளர்கள் ஏடிஎம் காவலாளிகள் என 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசன் பேசுகையில்:-

    வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் கண்டிப்பாக செக்யூரிட்டி காவலர் நியமிக்க வேண்டும் முக்கியமாக இரவு நேரங்களில் காவலர்கள் நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். (60 வயதுக்கு மேற்பட்ட வயதான வர்களை தவிர்க்க வேண்டும்).

    அனைத்து வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் கண்டிப்பாக பெயரளவுக்கு இல்லாமல் தரமான சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும். கேமரா நல்ல நிலையில் இயங்கு கிறதா என அடிக்கடி சரிபார்க்க வேண்டும். வங்கி மற்றும் ஏடிஎம் நோக்கியபடி எதிரே வெளியில் இருந்து கண்காணிக்கும்படி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

    அடிக்கடி வரும் நபர்கள் சந்தேகப்படும்படி தெரிந்தால் அந்த நபரை புகைப்படம் எடுத்தும், அந்த நபரை குறித்து உடனடியாக அருகிலுள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். நெடுநேரம் வங்கிக்குள் அமர்ந்து உள்ளவர்களை கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்திட வேண்டும். வங்கிக்குள் எச்சரிக்கை அலாரம் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். ஏடிஎம் வங்கிக்குள் செக்யூரிட்டி அலாரம் இணைக்கப்பட வேண்டும்.

    போலீஸ் நிலையத்துடன் நேரடியாக இணைத்திட வேண்டும். ஏ.டி.எம். வங்கி போலீஸ் நிலையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள ஏதுவாக ஹாட் லைன் இணைக்கப்பட வேண்டும் என பேசினார்.

    Next Story
    ×