என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26 -ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

    வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வான வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதைத்தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும் மற்றும் பஞ்ச மூர்த்தி களுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.

    தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும் 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசுர மர்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.

    மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.மாலை சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×