என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி தொழிலாளி பலி
- வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கீழ்க் கொடுங்காலூர் வினோபா நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள் ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழ்க்கொடுங்காலூர் அம்பேத்கர் நகர் அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமனின் சட லத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது மகன் நாகரா ஜன் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






