search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • 3 காலயாக பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த ஜெகநாதபுரம், கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து. 108 கலசம் வைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களை வைத்து, ஆனந்தன், சிவாச்சாரியார் தலைமையில் 3 காலயாக பூஜை செய்தனர்.

    பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு. சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இன்று இரவு தெய்வீக நாடகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    Next Story
    ×