என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ரங்கராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ குட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அந்த புனித நீரை பக்தர்களுக்கு மீது தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ குட்டியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மங்கலம் மேலவாத்தியங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






