என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் முளைகட்டிய நெல் விதைகள் கொண்டு நவராத்திரி கொலு
- தியான முத்திரை அலங்கரித்து வைக்கப்பட்டது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட விதை நெல் மூலம் அஷ்ட சக்தி நவராத்திரி கொலு வைக்கப்பட்டது.
நவராத்திரி விழா முன்னிட்டு 9 நாட்களுக்கு முளைக்கட்டிய விதைநெல்கள் வைத்து அஷ்ட சக்தி என்னும் தியான முத்திரை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
இதில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, மன ஒருமைப் பாட்டை அதிகரிக்க, நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள, கோபத்தை குறைக்க, வாழ்வில் முன்னேற்றம் அடைய, பயம் தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வை நீக்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ற நோக்கத்தில் அஷ்ட சக்தி வைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பலர் வருகை புரிந்து பார்த்து செல்கின்றனர்.
இத்தகைய ஏற்பாடுகளை பிரம்ம குமாரிகள் செய்திருந்தனர்.






