என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேஸ்திரி வீட்டில் நகை கொள்ளை
    X

    மேஸ்திரி வீட்டில் நகை கொள்ளை

    • போலீசார் விசாரணை
    • மர்ம கும்பலை தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சளூக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். மேஸ்திரி. இவரது மனைவி காயத்ரி (வயது 27). இவர் நேற்று வீட்டை பூட்டிக் கொண்டு நிலத்திற்கு சென்று விட்டார். பின்னர் மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து காயத்ரி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் பீரோவில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து காயத்ரி வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×