என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை
- வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி மனைவி புவனேஸ்வரி (வயது 51).
இவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டிற்குள் தூக்கில் தொங்கினார் புவனேஸ்வரி மகன் வெங்கடேசன் உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு புவனேஸ்வரி இறந்து விட்டார். இது சம்பந்தமாக புவனேஸ்வரி மகன் ரவி செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story






