என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
- குடும்ப தகராறில் பரிதாபம்
- உதவி கலெக்டர் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவு ன் கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27). இவர் சுங்குவார்சத்திரத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரது தாய் மாமன் மகளான கவுசல்யாவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனார்த்தனன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருத்திகா என்ற மகள் உள்ளார். ஜனார்த்தனனுக்கும், கவுசல்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்து கொண்டு கவுசல்யா தனது தாயார் வீட்டிற்கு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டார். பின்னர் ஜனார்த்தனன் கவுசல்யாவை அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. பின்னர் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியால் கவுசல்யா தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கவுசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி செய்யாறு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 வருடமே ஆவதால் உதவி கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார்.






