என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை
- குடும்ப பிரச்சினை காரணமா ?
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு :
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர். பாரதி, கார் டிரைவர் இவரது மனைவி பவித்ரா (வயது 23), இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
பவித்ரா, சேத்துப்பட்டு அருகே உள்ள மேல்வில்லிவனம், கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் உடலை கைபற்றி திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






