search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளவி கொட்டி பெண் பலி
    X

    குளவி கொட்டி பெண் பலி

    • ஓலையை எடுத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யார் அருகே உள்ள வட ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவர் மனைவி சரளா (வயது 55) விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 27-ந் தேதி சரளா அடுப்பு பற்ற வைப்பதற்காக வீட்டின் பின்புறம் இருந்த பண ஓலையை எடுத்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்த குளவிகள் சரளாவின் முகம், கால், கை, தலை ஆகிய பகுதிகளில் கொட்டியதால் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×