என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
- கிணற்றில் பிணமாக தொங்கினார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 48) விவசாயி. இவருக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கவிதா தன் குழந்தைகளுடன் தேத்துறை என்ற கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று நித்தியானந்தத்திற்கு வயிற்று வலி அதிகமாகவே வீட்டின் பின்புறம் கிணற்றில் ராட்டினம் கட்டும் கம்பியில் சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விட்டார்.
இது சம்பந்தமாக கவிதா கொடுத்த புகாரில் செய்யார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






