search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ராணுவ வீரர் மர்ம சாவு
    X

    முன்னாள் ராணுவ வீரர் மர்ம சாவு

    • மனைவியிடம் போலீசார் விசாரணை
    • 3 கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 45) முன்னாள் ராணுவ வீரர் இவருடைய மனைவி ரேவதி. மகள் பிரியதர்ஷினி (17) விக்னேஸ்வரன் (15) நீதர்(10) என்ற மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் ஆரணி டவுன் வி. ஏ. கே. நகர் அருகே உள்ள அம்மன் நகரில் வசித்து வந்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல், ரேவதி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ரேவதி அவரது மகள் மகன்களை அழைத்துக் கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் மோட்டூர் அருகே பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அம்மன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவரை பார்க்க ரேவதி வந்தார்.

    இரவு அவர் அங்கேயே தங்கினார். இன்று அதிகாலையில் வெற்றிவேலுக்கு உடல் நிலை சரியில்லை அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரது அண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சென்று வெற்றிவேலை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வெற்றிவேலின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வெற்றிவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அவரது மனைவி ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது இரவு முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்ததாகவும் அவர்கள் தாக்கியதில் வெற்றிவேல் காயம் அடைந்தார் எனவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரேவதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×