என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
- போலீசார் விசாரணை
- மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர்
ஆரணி:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்த பழனி (வயது 58). இவருக்கு மனைவி 3மகன் 1 மகள் உள்ளனர். பழனி ஆரணி நகராட்சியில் சுமார் 20 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
பழனி தற்போது பணிக்கு சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகரின் பின்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






