என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செய்யாறில் பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
- முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வலியுறுத்தல்
- தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்
செய்யாறு:
செய்யாறு திருவத்திபுரம், குமரன் திருவை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி அம்பிகா (வயது 32). செய்யாறு ஆரணி கூட்ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு 7.45 மணி அளவில் வேலை முடித்து ஆற்காடு சாலையில் சோழன் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் 2 பேர் அம்பிகாவை இடிப்பது போல் வந்து அம்பிகா கழுத்திலிருந்து 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர்.
இது சம்பந்தமாக செய்யாறு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
செய்யாறில் இதுபோன்று தாலி செயின் அறுத்துச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள்தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளன. அனைத்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருந்தால் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்