என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
- தொடரும் பைக் கொள்ளையர்களின் கைவரிசை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், கோபால் தெருவில் வசிப்பவர் ஆனந்தன்.
இவர் அரக்கோணம் நகராட்சியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆனந்தனின் மனைவி வைஷ்ணவி பிரியா (வயது 28), இவர் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் தற்காலிக அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் வைஷ்ணப்பிரியா டைப் ரைட்டிங் கிளாஸ் முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் காந்தி சாலையில் கோபால் தெரு சந்திப்பு அருகே செல்லும்போது பைக்கில் ஹெல்மெ ட் அணிந்து வந்த 2 பேர் வைஷ்ணவி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயினை அறுத்துக் கொண்டனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செய்யாறு ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்வபேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாலிச்சேனை அறுத்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார். தொரும் பைக் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.






