என் மலர்
உள்ளூர் செய்திகள்

எரிந்த நிலையில் ஆண் பிணம்
- போலீசில் புகார்
- கொலையா? விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
தகவல் தெரிந்த ஏழாச்சேரி கிராம நிர்வாக அலுவலர் கோகுல ராமன் தூசி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் பாதி உடல் எரிந்த நிலையில் உள்ளதால் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






