என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

    • 5 பவுன் நகை திருட்டு
    • போலீசார் விசாரணை

    வாணாபுரம்:

    வாணாபுரம் அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள பாவப்பட்டு நடுத்தெரு முரு கன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 39). கூலி தொழி லாளியான இவர் கேரளாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகி றார்.

    சம்பவத்தன்று பாவப்பட் டில் உள்ள இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அவரது உறவினர்கள் சிவாவிற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கேரளாவிலி ருந்து புறப்பட்டு வந்த சிவா வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    அதில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×