search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    350 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
    X

    350 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

    • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகரில் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் திமுக மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றிய சேர்மன் கனிமொழி சுந்தர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லலிதா சண்முக சுந்தரம், ஆகியோர் மாலை மற்றும் வலையல்களை அணிவித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் 350-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கள் சிவானந்தம் தயாநிதி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன், நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், ஒன்றிய குழு துணை சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், வட்டார மருத்துவ அலுவலர்கள் எம்நாத், சுரேஷ், பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×