என் மலர்
உள்ளூர் செய்திகள்

நண்பரை கட்டிப்போட்டு இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
- 3 வாலிபர்கள் கைது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம் பெண். இவருக்கு திருமணமாகி செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை பணி முடிந்து தனது நண்பருடன் பைக்கில் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சித்தாத்தூர் நமண்டி ஏரிக்கரை அருகே ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். நண்பருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மடக்கி அவர்களை வாலிபர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் இளம் பெண்ணுடன் வந்த வாலிபரை கயிற்றால் கட்டி போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வாலிபர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
அவரை விரட்டிச் சென்ற வாலிபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
சுதாரித்துக் கொண்ட இளம் பெண் வாலிபர்களிடம் இருந்து ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றார்.
இது பற்றி பொதுமக்களிடம் இளம்பெண் கூறினார். சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் விரைந்தனர்.
பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பின்னர் கட்டிப் போட்டிருந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர்.
இது குறித்து இளம் பெண் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற திருவடிராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (28), ரஞ்சித் குமார் (27), விக்னேஷ் ( 21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






