search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
    X

    அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

    • பஸ் நிறுத்துவது தொடர்பாக தகராறு
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பா ளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 57). இவர் ஆரணி முனியன்குடிசை அரசு பஸ் கண்டக்டராக உள்ளார்.

    கடந்த 16-ம்தேதி இரவு மேல்மட்டை விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (37) தனியார் பஸ் கன்டக்டர் என்பவர், பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் பூவாடை அம்மன் கோவில் மைதானத்தில் பஸ் நிறுத்துவது தொடர்பாக கோவிந்த சாமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கோவிந்தசாமியை தாக்கியுள்ளார். இது குறித்து கோவிந்தசாமி நேற்று கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×