search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.சி.யில் பெட்ரோல் கேட்டு ஊழியர்கள் மீது தாக்குதல்
    X

    ஓ.சி.யில் பெட்ரோல் கேட்டு ஊழியர்கள் மீது தாக்குதல்

    • போதை கும்பல் அட்டூழியம் கேமராவில் பதிவு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே போதை கும்பல் இலவசமாக பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

    வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.இங்கு நேற்று 2 பைக்கில் குடி போதையில் 5 பேர் வந்தனர் கும்பல், ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி மிரட்டியுள்ளது.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர்களை போதை கும்பல் வெறித்தனமாக தாக்கினர்.பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர்களை கும்பல் தாக்கும் காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கேமராவில் பதிவாகி இருக்கும் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×