என் மலர்
உள்ளூர் செய்திகள்

காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மனோகரன், சாந்தி மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான நேற்று காந்தி ஜெயந்தி தினத்தன்று சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
130 நிறுவனங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமல், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 3 நிறுவனங்களிலும் என மொத்தம் 72 நிறுவ னங்களில் முரண்பாடு கள் கண்டறியப்பட்டு, அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தகவலை திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்து உள்ளார்.






