search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
    X

    10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

    • போக்சோ சட்டத்தில் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10-ம் படிக்கும் 16 வயது மாணவியும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×