search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி அருகே வாலிபர் தற்கொலை
    X

    ஆரணி அருகே வாலிபர் தற்கொலை

    • குடும்ப சொத்தை பிரித்து தராததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகர் என்பவருக்கும் வள்ளி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்திரசேகர் வள்ளி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக குடும்ப சொத்தை பிரித்து தரக்கோரி தனது தாயாருடன் சந்திரசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மனமுடைந்த சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சந்திரசேகரனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து சந்திரசேகரின் மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் களம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×