search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைப்பு
    X

    ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைப்பு

    • குடும்ப பிரச்சினையில் கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக வாங்கியபோது சிக்கினார்
    • பல்வேறு ஆவணங் களை பறிமுதல் செய்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்களம் கீழ்பா லானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், ஓவியர். அவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கும், அவரது மனைவி பரிமளாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

    இது தொடர்பாக, கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மகளிர் போலீ சில் பரிமளா புகார் அளித்தார். புகாரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக வெற்றிவேலை விசாரணைக்கு அழைத்த மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    மேலும் பணத்துடன் வருமாறு அவகாசம் அளித்து அனுப்பினர் கணவன் மனைவி பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கைது செய்வேன் என மிரட்டி லஞ்சம் கேட்ட தால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், இதுதொடர் பாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அவரது புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ததால், சம்பந்தப்பட்ட பெண் எஸ் ஐயை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

    அதன் படி, விஜிலன்ஸ் போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பரமேஸ்வ ரியிடம் வெற்றி வேல் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையி லான குழுவினர் பரமேஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

    மேலும், இது தொடர்பாக பல்வேறு ஆவணங் களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாஜிஸ் திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை சிறையில் அடைத்தனர். இந்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×