search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காளம்மன் கோவிலில் 2000 பெண்கள் பால்குட ஊர்வலம்
    X

    பக்தர்கள் தீ மிதித்த காட்சி.

    அங்காளம்மன் கோவிலில் 2000 பெண்கள் பால்குட ஊர்வலம்

    • பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
    • பிரம்மோற்சவ விழா நடந்தது

    செய்யாறு:

    செய்யாறு டவுன், காமராஜர் நகர், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று 10-ம் நாள் திருவிழா முன்னிட்டு 2000 பெண் பக்தர்கள் ஞான முருகன் பூண்டி, முருகன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் ஊர்வலத்தின் போது அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இரவு 7 மணி அளவில் சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குவதற்காக, காப்பு கட்டி, விரதம் இருந்து, ஞான முருகன் பூண்டி, முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து தீச்சட்டி ஏந்தியும், அங்காளம்மன் வேடம் தரித்தும், கிரகம் சுமந்த படியும், ஓம் சக்தி, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.

    இவ்விழாவைக் காண செய்யாறு நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாக விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். செய்யார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையின் கீழ் விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×