என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் 2000 பெண்கள் பால்குட ஊர்வலம்
செய்யாறு:
செய்யாறு டவுன், காமராஜர் நகர், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
நேற்று 10-ம் நாள் திருவிழா முன்னிட்டு 2000 பெண் பக்தர்கள் ஞான முருகன் பூண்டி, முருகன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் ஊர்வலத்தின் போது அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இரவு 7 மணி அளவில் சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குவதற்காக, காப்பு கட்டி, விரதம் இருந்து, ஞான முருகன் பூண்டி, முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து தீச்சட்டி ஏந்தியும், அங்காளம்மன் வேடம் தரித்தும், கிரகம் சுமந்த படியும், ஓம் சக்தி, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.
இவ்விழாவைக் காண செய்யாறு நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாக விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். செய்யார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையின் கீழ் விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்